sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் அரசு டாக்டர் பலி

/

ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் அரசு டாக்டர் பலி

ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் அரசு டாக்டர் பலி

ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் அரசு டாக்டர் பலி


ADDED : அக் 23, 2024 01:23 AM

Google News

ADDED : அக் 23, 2024 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில்

அரசு டாக்டர் பலி

ஈரோடு, அக். 23-

சிவகிரி, தாண்டாம்பாளையம், சஷ்டி கார்டனை சேர்ந்த நல்லசாமி மகன் செந்தில்குமார், 28; சென்னை அரசு மருத்துவமனை டாக்டர். தற்போது எம்.டி., மேற்படிப்பு படித்து வந்தார்.

விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த நிலையில், இரு நாட்களாக காய்ச்சல் இருந்தது. திருப்பூர் மாவட்டம் முத்துாரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குறையவில்லை. கடந்த, 21ல் பரிசோதனை செய்ததில், வைரஸ் காய்ச்சல் என தெரியவந்தது.

இதனால் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செந்தில்குமார், ஆம்புலன்ஸில் அதே நாளில் அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் தாயார் பரமேஸ்வரி, உதவியாக மோகன்ராஜ், 50, கிளம்பினர்.

ஆம்புலன்சை டிரைவர் கவுதம் ஓட்டினார். அதிவேகமாக சென்ற நிலையில், ஈரோடு-முத்துார் சாலையில் வேலம்பாளையம் அருகே, பள்ளத்தில் கவிழுந்து மின் கம்பத்தில் மோதியது. இதில் செந்தில்குமார் உள்ளிட்ட மூவரும் பலத்த காயமடைந்தனர். மூவரும் மீட்கப்பட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

டாக்டர் பரிசோதனையில் செந்தில்குமார் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us