/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேளாளர் மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு
/
வேளாளர் மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு
ADDED : டிச 16, 2024 03:27 AM
ஈரோடு: ஈரோடு, திண்டல் வேளாளர் மகளிர் கல்லுாரியில், இளங்கலை, 2020--23; முதுகலை, 2021-23ம் ஆண்டுகளில் பயின்ற மாணவி-களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி செயலர் சந்திரசேகர் பட்டமளிப்பு விழா துவக்க அறிக்கை வாசித்தார். கல்லுாரி முதல்வர் ஜெயந்தி வரவேற்றார். தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் வெள்ளங்கிரி கீதா-லட்சுமி, பட்டங்களை வழங்கி பேசினார். இளநிலை பட்ட படிப்பில், 1,769 மாணவியர்; முதுகலையில், 454 பேர் என, 2,223 பேர் பட்டம் பெற்றனர். தேர்வில் முதன்மை பெற்ற, 117 மாணவிகளுக்கு பட்டத்துடன் பதக்கமும் வழங்கப்பட்டது. விழாவில் வேளாளர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயக்-குமார், இணை செயலாளர் நல்லசாமி, ராசமாணிக்கம் கலந்து கொண்டனர்.