ADDED : மே 13, 2025 01:43 AM
கோபி :கோபி மின் பகிர்மான வட்டத்தின் சார்பில், பவானி பகுதி மின் உபயோகிப்பாளருக்கான மாதாந்திர குறை தீர் கூட்டம், ஊராட்சிக்கோட்டை செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை, 11:00 மணி முதல், 1:00 மணி வரை நடக்கிறது. பவானி கோட்ட மின் நுகர்வோர், குறைகளை தெரிவித்து பயன் பெற, மேற்பார்வை பொறியாளர் சின்னுசாமி தெரிவித்துள்ளார்.
* ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி தலைமையில் நாளை காலை, 11:00 மணிக்கு, மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம், 'செயற்பொறியாளர் (வினியோகம்-தெற்கு), கோட்ட அலுவலகம், ஈ.வி.என்.சாலை, ஈரோடு' முகவரியில் நடக்கிறது. இதில் சோலார், கணபதிபாளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்துாரிபாய் கிராமம், அரச்சலுார், எழுமாத்துார், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு பகுதி பயனீட்டாளர்களின் குறைகளுக்கு தீர்வு காணப்படும்.