/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.2.70 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
/
ரூ.2.70 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
ADDED : டிச 28, 2024 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது. புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதி மற்றும் திருப்பூர், கோவை மாவட்டங்களில் இருந்து, விவ-சாயிகள் நிலக்கடலை மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். மொத்தம். 45 கிலோ எடையுள்ள, 109 நிலக்கடலை மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
நிலக்கடலை (காய்ந்தது) முதல் தரம், 62 முதல், 64.70 ரூபாய் வரையும், இரண்டாம் தரம், 58 முதல் 61 ரூபாய் வரையும் ஏலம் கூறப்பட்டு, 2.70 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. பொள்-ளாச்சி, உடுமலைப்பேட்டை வியாபாரிகள் நிலக்கடலைகளை ஏலம் எடுத்தனர்.