ADDED : டிச 07, 2024 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது. புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதி மற்றும் திருப்பூர், கோவை மாவட்ட கிராமங்களில் இருந்து, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், 45 கிலோ எடையில், 181 மூட்டை கொண்டு வந்தனர்.
இதில் காய்ந்தது முதல் தரம் கிலோ, 62 ரூபாய் முதல், 66 ரூபாய்; இரண்டாம் ரகம், 56 ரூபாய் முதல், 61 ரூபாய் வரை, 4
லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. பொள்ளாச்சி, உடுமலை பகுதி வியாபாரிகள் ஏலம் எடுத்தனர்.