/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு லாட்ஜில் துப்பாக்கி, தோட்டா பறிமுதல்: டில்லி வாலிபர் கைது
/
ஈரோடு லாட்ஜில் துப்பாக்கி, தோட்டா பறிமுதல்: டில்லி வாலிபர் கைது
ஈரோடு லாட்ஜில் துப்பாக்கி, தோட்டா பறிமுதல்: டில்லி வாலிபர் கைது
ஈரோடு லாட்ஜில் துப்பாக்கி, தோட்டா பறிமுதல்: டில்லி வாலிபர் கைது
ADDED : அக் 10, 2024 03:31 AM
ஈரோடு:ஈரோட்டில், லாட்ஜ் அறையில் ஆறு தோட்டாக்களுடன், கை துப்பாக்கி கண்டெடுத்த விவகா ரத்தில், டில்லியை சேர்ந்த வாலி பரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு, சத்தி சாலையில் ஆர்.ஆர். லாட்ஜ் அறை ஒன்றில், கடந்த செப்., 25 மாலை படுக்கை தலையணைக்கு அடியில் இருந்து ஒரு துப்பாக்கி, ஆறு தோட்டாக்களை லாட்ஜ் ஊழி-யர்கள், அறையை சுத்தம் செய்யும் போது கண்டுபிடித்தனர். இந்த அறையில் செப்.,23 முதல் 25 வரை இரு நபர்கள் தங்கி உள்ளனர். அறையை காலி செய்த பின் துப்பாக்கி, தோட்டாக்கள் கிடைத்தது. ஈரோடு டவுன் போலீசார் அவற்றை கைப்பற்றி ஊழி-யர்கள், மேலாளரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அங்கி-ருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆராய்ந்து, அறையில் தங்கி சென்ற நபர்களின் வீடியோக்களை எடுத்தனர்.இது குறித்து விசாரணை நடத்த இன்ஸ்பெக்டர்கள் கோமதி, விஜயன் கொண்ட இரு தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் டில்லி சென்று இருவர் குறித்து விசாரணை நடத்தினர். இதில் டில்லியை சேர்ந்த வாலிபர் ஒருவரை, கடந்த 6ம் தேதி கைது செய்துள்ளனர். அவரை விசாரணைக்காக ஈரோட்டுக்கு ரயில் மூலம் அழைத்து வந்தனர்.இதுபற்றி போலீசார் கூறியதாவது:
ஈரோடு ஆர்.ஆர். லாட்ஜ் அறையில் தங்கிய இருவரில், ஒருவ-ரான டில்லியை சேர்ந்த முகமது மகன் தாரிப்கான், 24, என்பவர் டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஈரோடுக்கு விசார-ணைக்காக அழைத்து வந்துள்ளோம். தலைமறைவாக உள்ள நபர், வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்ததாக தெரி-வித்துள்ளார்.
எனினும் துப்பாக்கி, ஆறு தோட்டாக்கள் இருந்தது இவருக்கு தெரியும். வரும், 12 வரை காவலில் வைத்து விசாரிக்க டில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தேவைப்பட்டால் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், மீண்டும் காவலில் எடுத்து விசாரிப்போம். இவர்கள் எதற்காக துப்பாக்கியை கொண்டு வந்-தனர். இவர்கள் ஏதேனும் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்-களா? என்று தெரியவில்லை. தலைமறைவாக உள்ள நபரை பிடிக்க, டில்லி போலீசாரின் உதவியை நாடி உள்ளோம்.
இவ்வாறு கூறினர்.

