/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விடுதியில் துப்பாக்கி; விடை தேடும் போலீஸ்
/
விடுதியில் துப்பாக்கி; விடை தேடும் போலீஸ்
ADDED : அக் 14, 2024 05:07 AM
ஈரோடு: ஈரோட்டில் சத்தி சாலையில் உள்ள ஒரு விடுதியில் கடந்த மாதம், ௨௫ம் தேதி ஒரு துப்பாக்கி, ஆறு தோட்டா சிக்கியது. இதுதொடர்-பாக ஈரோடு டவுன் போலீசார், டில்லியை சேர்ந்த முகமது மகன் தாரிப்கானை, 24, கைது செய்தனர். இதில் தொடர்புடைய முக்-கிய நபரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் சில தினங்களுக்கு முன், துப்பாக்கி விற்ப-னையில் ஈடுபட்ட ஆறுபேரை கரூர் மாவட்ட சிறப்பு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இரு பிஸ்டல், 6 தோட்டா கைப்பற்றப்பட்டது. இந்த கும்பலுக்கும், விடுதி அறையில் தோட்டாக்களுடன் துப்பாக்கியை விட்டு சென்ற நபர்களுக்கும் தொடர்புள்ளதா? என, டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்-டுள்ளனர்.இந்நிலையில் கரூர் கும்பல், ஈரோடு லாட்ஜ் அறையில் துப்பாக்கி விட்டு சென்ற நபரின் மொபைல் போன் எண் அழைப்பு பரி-வர்த்தனை குறித்து ஆராய முடிவு செய்துள்ளனர். இதில் ஏதாவது ஆதாரம் கிடைத்தால், கரூர் போலீசில் பிடிபட்டுள்ள ஆறு பேர் கும்பலிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக, போலீசார்
தெரிவித்தனர்.