sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

செல்லாண்டியம்மன் கோவிலில் குண்டம் விழா

/

செல்லாண்டியம்மன் கோவிலில் குண்டம் விழா

செல்லாண்டியம்மன் கோவிலில் குண்டம் விழா

செல்லாண்டியம்மன் கோவிலில் குண்டம் விழா


ADDED : ஏப் 11, 2024 11:34 AM

Google News

ADDED : ஏப் 11, 2024 11:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் விழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஈரோடு, நேதாஜி சாலை முனிசிபல் சத்திரம் பகுதியில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம், பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதேபோல் நடப்பாண்டு குண்டம் விழா கடந்த மாதம், 26ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது.

கடந்த, 7ம் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம், பால் குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டு சென்றனர். மேலும் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தி வந்தும் அம்மனை வழிபட்டனர்.

முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு நடந்தது. கோவில் பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். பின்னர், காப்பு கட்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் ஏராளமானோர் குண்டம் இறங்கி, தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல், மாலை மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இன்று மாலை, 4:30 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us