sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடந்த குண்டம் தீ மிதி விழா

/

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடந்த குண்டம் தீ மிதி விழா

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடந்த குண்டம் தீ மிதி விழா

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடந்த குண்டம் தீ மிதி விழா


ADDED : மே 02, 2025 01:27 AM

Google News

ADDED : மே 02, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி:

அம்மாபேட்டை அருகே, செல்லாயூரில் செல்லியண்டி அம்மன், பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை குண்டம் திருவிழா, சித்திரை மாதத்தில் வெகு விமர்சையாக கோவிலில் நடைபெறும். அந்த வகையில் கடந்த, 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து வந்தது.

முக்கிய நிகழ்வான நேற்று, பெண்கள் பொங்கல் வைத்தனர். பின்னர் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமனோர் நீண்ட வரிசையில் வந்து, சுவாமி தரிசனம் செய்தனர். சிலர் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று கம்பம் பிடுங்கி, மஞ்சள் நீராட்டு விழாவுடன் பண்டிகை நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us