/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மளிகை கடையில் குட்கா விற்றவர் கைது
/
மளிகை கடையில் குட்கா விற்றவர் கைது
ADDED : நவ 22, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி,பவானியை அடுத்த பெருமாள்மலையில் உள்ள ஒரு மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பதாக கிடைத்த தகவலின்படி
சித்தோடு போலீசார் சோதனை செய்தனர். இதில் ஹான்ஸ், விமல் பாக்கு என, 32 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் வனிதாவை, 60, கைது செய்தனர்.

