/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அருங்காட்சியகத்தில்சிலை ஒப்படைப்பு
/
அருங்காட்சியகத்தில்சிலை ஒப்படைப்பு
ADDED : ஜன 05, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,கோபியை அடுத்த அயலூர் கிராமத்தில் விளைநிலத்தில், சில மாதங்களுக்கு முன் ஒரு சிலை கிடைத்தது, கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் சிலையை மீட்டு, அலுவலகத்துக்கு கொண்டு சென்றார். கலெக்டர் மற்றும் அரசு அருங்காட்சியகத்துக்கு தகவல் அளித்துள்ளார்.
கோபி ஆர்.டி.ஓ., அறிவுறுத்தலின்படி, ஈரோடு அரசு அருங்காட்சியர் ஜென்சியிடம், வி.ஏ.ஓ., சக்திவேல், சிலையை நேற்று ஒப்படைத்தார். காப்பாட்சியர் ஜென்சி கூறுகையில், 'சிலை, 12ம் நூற்றாண்டை சேர்ந்தது. கோவில் நுழைவு வாயிலில் வைக்கப்படும் சிலையாகும். இதை சங்கநதி என தொல்லியல் ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்' என்றார்.

