sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'தண்ணீரை காய்ச்சிக் குடிங்க' சுகாதாரத்துறை 'அட்வைஸ்'

/

'தண்ணீரை காய்ச்சிக் குடிங்க' சுகாதாரத்துறை 'அட்வைஸ்'

'தண்ணீரை காய்ச்சிக் குடிங்க' சுகாதாரத்துறை 'அட்வைஸ்'

'தண்ணீரை காய்ச்சிக் குடிங்க' சுகாதாரத்துறை 'அட்வைஸ்'


ADDED : மே 27, 2025 01:52 AM

Google News

ADDED : மே 27, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், 'பருவமழை காரணமாக நகரில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவாகியுள்ளது. காய்ச்சல், இருமல், சளி பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்,' என, திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே துவங்கியதால், வழக்கமான நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்டம் மருத்துவம் மற்றும் பொதுசுகாதாரத்துறை அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.

இது குறித்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி கூறியதாவது:

தேங்கிய மழைநீரில் லார்வா, கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ளது. எனவே, வீடுகளை சுற்றி மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வசிப்பிடங்களை துாய்மையாக வைக்க வேண்டும். வீடுகளில் திறந்த வெளியில் தொட்டி, தேங்காய் சிரட்டை, மழைநீர் தேங்கும் வகையிலான பொருட்கள் இருந்தால், உடனடியாக அகற்ற வேண்டும்.

வீட்டையும், சுற்றுப்புறத்தையும் துாய்மையாக வைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தண்ணீரை நன்கு காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும்; மழை காலங்களில் முடிந்த வரை சூடான ஆகாரங்களை பருகுவது ஆரோக்கியம் பேண உதவும். குழந்தைகள், பெரியவர்கள், இணைநோய் உள்ளவர்களை கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு மேல் குறையாமல் காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி தொடர்ந்தால், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைக்கு வந்து டாக்டரை சந்தித்து, ஆலோசனை சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us