ADDED : நவ 08, 2025 04:24 AM
சென்னிமலை: சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் சர-வணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ள, சென்-னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, சுவாமி அபிஷேகத்-துக்கு தினமும் பொதி காளை மூலம் படிக்க்டடு வழியாக திரு-மஞ்சனம் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக சென்னிமலை கோவில் தேஸ்தானம் சார்பாக, பொதி காளை பாராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பொதி காளை இறந்து விட்டதாக, சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. இது முற்-றிலும் தவறான தகவல். கோவில் பற்றி உண்மை தெரியாமல் இதுபோன்ற தவறான தகவலை பரப்ப வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். திருமஞ்சனம் கொண்டு செல்ல பராமரிக்கப்படும் மூன்று பொதி காளைகளின் படங்க-ளையும் வெளியிட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டம் ஆறுதொழுவு கிராமத்தில் சிவன்மலை ஆண்டவர் தீர்த்த காவடி குழுவில் பாராமரிக்கப்பட்ட வந்த காளை இறந்து விட்டது. இதை வைத்து சென்னிமலை கோவில் காளை இறந்து விட்டதாக தகவல் பரவி விட்டது.

