ADDED : அக் 16, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்ப்பிணிக்கு வீட்டில் பிரசவம்
ஈரோடு, அக். 16-
ஈரோடு, மாணிக்கவாசகர் காலனியை சேர்ந்த சுதன் மனைவி காஞ்சனா மாலிக், 20; நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று நள்ளிரவு, 2:00 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. தகவலறிந்து லக்காபுரம் பகுதி, 108 ஆம்புலன்ஸ் வேன் வீட்டுக்கு வந்தது. ஆனால், பிரசவ வலி அதிகமானதால், வீட்டிலேயே பிரசவம் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ஆம்புலன்ஸ் டிரைவர் சிவசங்கர், அவசர கால மருத்துவ நிபுணர் சந்திரன் பிரசவம் பார்த்தனர். இதில் ஆண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து தாய், குழந்தை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பிரசவம் பார்த்த ஓட்டுனர் சிவசங்கர், அவசர கால மருத்துவ நிபுணர் சந்திரனை, டாக்டர்கள் பாராட்டினர்.