sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பொல்லான் நினைவிடம் கட்ட இடம் கொடுத்த 6 பேருக்கு வீடு கட்ட ஆணை

/

பொல்லான் நினைவிடம் கட்ட இடம் கொடுத்த 6 பேருக்கு வீடு கட்ட ஆணை

பொல்லான் நினைவிடம் கட்ட இடம் கொடுத்த 6 பேருக்கு வீடு கட்ட ஆணை

பொல்லான் நினைவிடம் கட்ட இடம் கொடுத்த 6 பேருக்கு வீடு கட்ட ஆணை


ADDED : டிச 26, 2025 05:04 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் உருவச்சிலையுடன், ஈரோடு மாவட்டம் ஜெயராமபுரத்தில், நினைவரங்கம் அமைக்கப்பட்டது. இதற்காக இடம் வழங்கிய, ஆறு பேருக்கு வீடு கட்ட ஆணை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது. ஆறு பேருக்கும் வீடு கட்ட ஆணை வழங்கி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:

பொல்லான் நினைவிடம் அமைக்க ஜெயராமபுரத்தில், ஒரு ஏக்கர் இடம் பார்த்தபோது, ஆறு குடும்பத்தார் பல ஆண்டாக வசித்து வந்தனர். அவர்களுக்கு பட்டா இல்லை. இருப்பினும், நினை-விடம் அமைவதை விளக்கி, அவர்களுக்கு வேறிடத்தில் தற்கா-லிக வீடு வழங்கி தங்க வைத்துள்ளோம். அவர்களது வீடு இடித்து அகற்றப்பட்டதால், அரசு சார்பில் வீடு கட்டித்தர திட்ட-மிடப்பட்டது. அவர்களது மனை டவுன் பஞ்., பகுதியில் உள்-ளதால், அரசின் வீடு கட்டும் திட்டத்தில் உதவ முடியவில்லை. இதுபற்றி முதல்வரிடம் பேசி, ஆறு பேருக்கு மட்டும் சிறப்பு அனுமதி பெற்று, இங்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்-பட்டுள்ளது. வரும், 28ல் பொல்லான் நிகழ்ச்சி அரசு மூலம் நடத்-தப்படுகிறது. பொல்லானுக்கு உதவிகரமாக இருந்தவர்கள் என வேறு நபர்களுக்கு நினைவிடம், சிலை அமைக்க கோரிக்கை வரும் பட்சத்தில், வரலாற்று ஆவணங்களுடன் ஒப்பிட்டு அரசு பரிசீலிக்கும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

பா.ஜ., முயற்சி

பொல்லான் நினைவிடத்துக்கு இடம் வழங்கியவர்கள் உட்பட பலருக்கு பட்டா, வீடு கட்ட ஆணை வழங்காமல் இழுத்தடிக்கப்-பட்டனர். கடந்த திங்கள் அன்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் பா.ஜ.,வினர், பாதிக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து மனு வழங்கிய நிலையில், இந்த ஆறு பேருக்கு வீடு கட்ட ஆணை தரப்பட்டது.






      Dinamalar
      Follow us