/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விபத்தில் பாட்டியுடன் கணவன் பலி இளம் மனைவி தற்கொலை முயற்சி
/
விபத்தில் பாட்டியுடன் கணவன் பலி இளம் மனைவி தற்கொலை முயற்சி
விபத்தில் பாட்டியுடன் கணவன் பலி இளம் மனைவி தற்கொலை முயற்சி
விபத்தில் பாட்டியுடன் கணவன் பலி இளம் மனைவி தற்கொலை முயற்சி
ADDED : செப் 20, 2024 02:46 AM
பவானி: பவானி அருகே விபத்தில், பாட்டியுடன், கணவன் பலியான நிலையில், இளம் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது சோகத்தை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியிலிருந்து பவானியை நோக்கி, நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு கார் வந்தது. அதேசமயம் பேசன் புரோ பைக்கில் கோபி, பங்களாபுதுார், புஞ்சை துரையம்பாளையம் வடக்குத் தெரு நந்தகுமார், 24, அவ-ரது பாட்டி சரஸ்வதி, 62, பவானியிலிருந்து பங்களாபுதுாருக்கு சென்றனர். ஜம்பை கழுங்கு பாலம் அருகே கார், பைக் எதிர்பா-ராதவிதமாக மோதிக் கொண்டது. இதில் பலத்த காயமடைந்த பாட்டி, பேரன் சம்பவ இடத்தில் பலியாகினர்.
கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர வலதுபுற பள்ளத்தில் கவிழ்ந்தது. காரை ஓட்டி வந்த சித்தோடு கார்த்திகேயன், 35, இடுப்பில் பலத்த காயமடைந்தார். பவானி போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி, பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்-பினர். கார்த்திகேயன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மனைவி தற்கொலை முயற்சி
நந்தகுமாரின் மனைவி இலக்கியா, ௨௩; விபத்தில் கணவன் பலி-யான தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். கணவன், அவரது பாட்டி உடல், நேற்று வீட்டுக்கு கொண்டு வருவதை அறிந்து, துக்கம் தாளாமல் அவரது தோட்டத்து கிணற்றில் குதித்து விட்டார்.
துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து, கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் கயிறு கட்டி இலக்கியாவை மீட்டனர். கை, கால்களில் காயங்களுடன் கோபி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நந்தகுமார்-இலக்கியா தம்பதிக்கு திருமணமாகி ஆறு மாதங்களே ஆவதாக,
உறவினர்கள் தெரிவித்தனர்.