/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இளம்பெண் இறந்த வழக்கில் கணவன், மாமியார் கைது
/
இளம்பெண் இறந்த வழக்கில் கணவன், மாமியார் கைது
ADDED : ஜன 15, 2025 12:31 AM
இளம்பெண் இறந்த வழக்கில்
கணவன், மாமியார் கைது
கோபி,:
கவுந்தப்பாடி அருகே ராமசாமிக்கவுண்டர் வீதியை சேர்ந்தவர் அபுசேன், 25, கார் மெக்கானிக்; பெருந்துறை அருகே விஜயமங்கலத்தை சேர்ந்தவர் ரிஜ்வானா, 20; இருவருக்கம், 2024 மே.,9ல் திருமணம் நடந்தது.
கடந்த, 2024 ஆக.,14ல், ரிஜ்வானா துாக்கிட்டு கொண்டதாக, கணவன் வீட்டார் தகவல் தந்தனர். அவரின் பெற்றோர் சென்று பார்த்தபோது, ரிஜ்வானா இறந்து கிடந்தார்.
மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரின் தாய் பர்காத் பானு கொடுத்த புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து கோபி ஆர்.டி.ஓ., விசாரணை அறிக்கையின் படி, இரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அபுசேன், 24, அவரது தாயார் பானு, 43, ஆகியோரை கைது செய்தனர்.