/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விபத்தில் காயமடைந்த அரசு செவிலியர் கணவர் சாவு
/
விபத்தில் காயமடைந்த அரசு செவிலியர் கணவர் சாவு
ADDED : செப் 06, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம் :தாராபுரம், கொட்டாபுளிபாளையம் ரோடு விக்னேஷ் நகரை சேர்ந்தவர் நீலக்கண்ணன், 47; தனியார் பிசியோதெரபிஸ்ட். இவரது மனைவி சரண்யா, 41; தாராபுரம் அரசு மருத்துவமனை தலைமை செவிலியர்.
கடந்த மாதம், 24ம் தேதி மாலை பைக்கில் சென்ற நீலக்கண்ணன், தாராபுரம் பைபாஸ் சாலையில் தனியார் கல்லூரி அருகே கார் மோதியதில் படுகாயம் அடைந்தார். கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை இறந்தார்.