/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிரிந்து வாழும் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்
/
பிரிந்து வாழும் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்
ADDED : ஆக 20, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, சூரம்பட்டியை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 36; டூவீலர் மெக்கானிக். இவர் மனைவி கோகிலா, 33; மாதேஸ்வரன் மதுவுக்கு அடிமையானவர்.
இதனால் ஒன்றரை மாதத்துக்கு முன் கணவனை பிரிந்த கோகிலா, பெரியார் நகரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று மாலை அதே பகுதியில் பால் வாங்க சென்ற கோகிலாவை வழிமறித்த மாதேஸ்வரன், கத்தியால் தலையில் வெட்டினார். இதில் ரத்தம் கொட்டிய நிலையில் மயங்கி விழுந்தார். அப்பகுதி மக்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய மாதேஸ்வரனை, ஈரோடு டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.

