/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இடியாப்ப வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
/
இடியாப்ப வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
ADDED : ஜன 08, 2026 07:03 AM
கரூர்: கரூர் அருகே, மூன்று பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, இடியாப்ப வியா-பாரியை, குண்டர் சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா என்பவரது மகன் பகீர் முகமது, 43; இடியாப்ப வியாபாரி. திருமண-மானவர். இவர் கடந்த டிச., 13ல் அதே பகுதியை சேர்ந்த, 12, 10, 7 ஆகிய மூன்று சிறுமிகளை ஒரு வீட்டில் அடைத்து வைத்து, பகீர் முகமது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகு-றித்து, 12 வயது சிறுமியின் தந்தை, கரூர் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து பகீர் முகமதுவை, கரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி போக்சோ சட்-டத்தின் கீழ் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தார். இந்நிலையில், கரூர் எஸ்.பி., ஜோஷ் தங்கையா பரிந்துரையின் பேரில், பகீர் முகமதுவை குண்டர் சட்டத் தின் கீழ் கைது செய்ய, கலெக்டர் தங்கவேல் உத்தர-விட்டார்.
இதனால், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்-பட்டுள்ள பகீர் முகமதுவிடம், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை, கரூர் மகளிர் போலீசார் நேற்று வழங்கினர்.

