sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

225 பஞ்.,களிலும் கிராமசபை கூட்டம் பஞ்.,களை பிற உள்ளாட்சிகளுடன் இணைக்க எதிர்ப்பு

/

225 பஞ்.,களிலும் கிராமசபை கூட்டம் பஞ்.,களை பிற உள்ளாட்சிகளுடன் இணைக்க எதிர்ப்பு

225 பஞ்.,களிலும் கிராமசபை கூட்டம் பஞ்.,களை பிற உள்ளாட்சிகளுடன் இணைக்க எதிர்ப்பு

225 பஞ்.,களிலும் கிராமசபை கூட்டம் பஞ்.,களை பிற உள்ளாட்சிகளுடன் இணைக்க எதிர்ப்பு


ADDED : அக் 03, 2024 06:56 AM

Google News

ADDED : அக் 03, 2024 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 225 பஞ்சாயத்துக-ளிலும் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது.

பவானி யூனியன், ஓடத்துறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பஞ்., தலைவர் பாலமுருகன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர் ராஜ-கோபால் சுன்கரா பேசியதாவது: பஞ்சாயத்துக்க-ளுக்கு உட்பட்ட வரவு-செலவு கணக்குகள், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மக்கள் எடுத்து-ரைக்க வேண்டும். இளம் வயது திருமணம், இளம் வயது கர்ப்பம், ஊட்டச்சத்து குறைபாடு, வேளாண் துணை திட்டங்கள், மண்ணுயிர் காப்போம், டெங்கு விழிப்புணர்வு என அனைத்து இனங்களிலும் பொதுமக்களுக்கு விளக்கம் தரப்-படும்.

கொசு உற்பத்தியை தடுக்க சிமென்ட் தொட்டி, குடிநீர் தேக்கும் பொருட்கள், கீழ் நிலை, மேல்-நிலை தொட்டிகளை வாரம் ஒரு முறை பிளீச்சிங் பவுடர், சாம்பல் கொண்டு சுத்தம் செய்த பின், நீரை பிடிக்க வேண்டும். குழந்தை திருமணங்கள் குறித்து தகவல் அறிந்தால், 1098 என்ற எண்-ணுக்கு தெரிவிக்கலாம்.இவ்வாறு பேசினார்.

பயிற்சி உதவி கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, உதவி இயக்குனர் (பஞ்சாயத்து) உமாசங்கர், வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலு-வலர் பூங்கோதை உட்பட பலர் பங்கேற்றனர்.ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பஞ்சாயத்துக்-களில் நடந்த கிராமசபை கூட்டத்தில், பாண்டி-யாறு - மோயாறு இணைப்பு திட்டத்தை வலியு-றுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.கோபி நகராட்சியை ஒட்டிய பகுதியில் உள்ள குள்ளம்பாளையம், பா.வெள்ளாளபாளையம், மொடச்சூர், பாரியூர், லக்கம்பட்டி போன்ற பஞ்-சாயத்தில், 'இப்பஞ்சாயத்துக்களை கோபி நக-ராட்சியுடன் இணைக்கக்கூடாது. அவ்வாறு இணைத்தால் அனைத்து வரி இனங்களும் உயரும். 100 நாள் வேலை திட்டம் போன்ற பல திட்டங்கள் பறி போகும்,' எனக்கூறி, தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.






      Dinamalar
      Follow us