/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாணவர்களுக்கு தடகள போட்டி துவக்கம்
/
மாணவர்களுக்கு தடகள போட்டி துவக்கம்
ADDED : நவ 10, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாணவர்களுக்கு
தடகள போட்டி துவக்கம்
ஈரோடு, நவ. 10-
ஈரோடு வ.உ.சி., மைதானத்தில், மாணவர்களுக்கான மாநில அளவிலான தடகள போட்டி நேற்று துவங்கியது. போட்டிகள், 14 வயது, 17 வயது, 19 வயது வாரியாக நடந்தது. 100 மீட்டர், 200 மீ, 400 மீ, 600 மீ, 1,500 மீ, தொடர் ஓட்டம், 100 மீ தடை தாண்டி ஓடும் போட்டி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், கையுந்தி தாண்டும் போட்டி, கோலுந்தி தாண்டும் போட்டி, குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டெறிதல் என, 43 பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து, 2,710 மாணவர்கள் பங்கேற்கின்றனர்