ADDED : நவ 11, 2024 07:30 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் (பேட்டியா), கட்டட திறப்பு விழா நடந்தது. கூட்டமைப்பின் வெள்ளி விழா ஆண்டையொட்டி, ஈரோடுநசியனுார் சாலை வீரப்பம்பாளையம் விவேகானந்தா வீதியில், இரண்டு தளங்களுடன் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை, சக்தி மசாலா நிறுவன நிர்வாக இயக்குனர் துரைசாமி, சாந்தி துரைசாமி திறந்து வைத்தனர்.
கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். பொது செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர். கே.எஸ்.தென்னரசு அரங்கத்தை முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
உணவு அரங்கத்தை ஈரோடு இந்து கல்வி நிலைய தாளாளர் பாலுசாமி திறந்து வைத்தார். கூட்டரங்கை ஒளிரும் ஈரோடு தலைவர் சின்னசாமி திறந்து வைத்தார். கட்டடம் கட்ட நன்கொடை வழங்கிய சங்கங்கள், கவுரவ உறுப்பினர்களுக்கு நினைவுப்பரிவு வழங்கப்பட்டது. மாவட்டத்தின் முக்கிய பிரமுகர்கள், கூட்டமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.