sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொழிலாளர் துறை அலுவலக கட்டடம் திறப்பு திருப்பூர், ஆக. 26

/

தொழிலாளர் துறை அலுவலக கட்டடம் திறப்பு திருப்பூர், ஆக. 26

தொழிலாளர் துறை அலுவலக கட்டடம் திறப்பு திருப்பூர், ஆக. 26

தொழிலாளர் துறை அலுவலக கட்டடம் திறப்பு திருப்பூர், ஆக. 26


ADDED : ஆக 26, 2025 01:54 AM

Google News

ADDED : ஆக 26, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாவட்டம் உருவான பின், தொழிலாளர் துறை அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வருகின்றன. சமூகபாதுகாப்பு திட்ட உதவி கமிஷனர் அலுவலகம் மட்டும், பி.என்.,ரோடு மேட்டுப்பாளையம் அருகே, வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. மக்கள் வசதிக்காக, ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் கட்ட முடிவு செய்து, நான்கு ஆண்டுகளாக பணி நடந்து வந்தது.

தொழிலாளர் துறை சார்பில், ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டடம், அவிநாசி ரோடு, குமார் நகர் அருகே கட்டப்பட்டது. தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன், 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில், பொதுமக்கள் காத்திருப்பு அறை, முத்திரை ஆய்வாளர் அறை, ஆய்வகம், முத்திரையிடும் அற மற்றும் பதிவறை அமைய உள்ளது.

முதல் தளத்தில், தொழிலாளர் துறை உதவி கமிஷனர் ( அமலாக்கம்), அறை, அலுவலக அறை, தொழிலாளர் உதவி கமிஷனர் (சமரசம்) அறை, அலுவலக அறை, இரண்டாவது தளத்தில், தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அறை, பதிவறை, கருத்தரங்கு அறை, நீதிமன்ற அறை அமைகிறது.






      Dinamalar
      Follow us