sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு மாவட்டத்தில் 3ம் நாளாக வருமான வரித்துறை சோதனை

/

ஈரோடு மாவட்டத்தில் 3ம் நாளாக வருமான வரித்துறை சோதனை

ஈரோடு மாவட்டத்தில் 3ம் நாளாக வருமான வரித்துறை சோதனை

ஈரோடு மாவட்டத்தில் 3ம் நாளாக வருமான வரித்துறை சோதனை


ADDED : ஜன 10, 2025 07:18 AM

Google News

ADDED : ஜன 10, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இ.பி.எஸ்.,உறவினரின் வீடுகள், அலுவலகங்கள், ஆலையில் நேற்றும் மூன்றாவது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்ந்தது.

ஈரோடு அவல்பூந்துறை பகுதியை சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் ராமலிங்கம். இவருக்கு சொந்தமாக என்.ஆர்.கட்டுமான நிறுவனம், டோல் பிளாசா, திருமண மண்டபம், ஸ்டார்ச் மாவு ஆலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இவரது நிறுவனம் தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் மத்திய, மாநில அரசுகளிடம் ஒப்பந்தம் செய்து, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க., பொது செயலர் இ.பி.எஸ்., உறவினர் ஆவார்.

ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்.ஆர்.கட்டுமான நிறுவன அலுவலகம், ராமலிங்கம் வீடு, பூந்துறை சாலையில் உள்ள என்.ஆர் திருமண மண்டபம், முள்ளாம்பரப்பில் செயல்படும் ஆர்.பி.பி., கட்டுமான நிறுவனத்திலும் கடந்த, 7ம் தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். அம்மாபேட்டை அடுத்த பூனாச்சியில் உள்ள ராமலிங்கத்துக்கு சொந்தமான மரவள்ளி கிழங்கு அரவை (ஸ்டார்ச் மாவு) ஆலையிலும், 7ம் தேதி முதல் சோதனை நடக்கிறது. இந்த இடங்களில் மூன்றாம் நாளாக நேற்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்தது.






      Dinamalar
      Follow us