sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புதிய மஞ்சள் வரத்து அதிகரிப்பு குவிண்டாலுக்கு ரூ.1,500 வரை விலை உயர்வு

/

புதிய மஞ்சள் வரத்து அதிகரிப்பு குவிண்டாலுக்கு ரூ.1,500 வரை விலை உயர்வு

புதிய மஞ்சள் வரத்து அதிகரிப்பு குவிண்டாலுக்கு ரூ.1,500 வரை விலை உயர்வு

புதிய மஞ்சள் வரத்து அதிகரிப்பு குவிண்டாலுக்கு ரூ.1,500 வரை விலை உயர்வு


ADDED : பிப் 13, 2025 03:08 AM

Google News

ADDED : பிப் 13, 2025 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு ஏல விற்பனை கூடங்களுக்கு, புதிய மஞ்சள் வரத்தாகி குவிண்டால், 1,500 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையாகி-றது.

இதுபற்றி, ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமை-யாளர் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது: ஈரோடு பகுதி விற்பனை கூடங்களில் பழைய மஞ்சள் குவிண்டால், 7,000 முதல், 13,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. புதிய மஞ்சள் குவிண்டால், 1,000 முதல், 1,500 ரூபாய் உயர்ந்து, 12,500 ரூபாய் மதல், 14,500 ரூபாய் வரை விற்பனையாகிறது. அந்தியூர் பகுதியில் கடந்த, 10 நாட்களுக்கு முன் அறுவடை துவங்கி, புதிய மஞ்சள் வரத்தாகிறது. கர்நாடகாவிலும், தர்மபுரி மாவட்டத்திலும் அறுவடை நடந்ததால் அங்கிருந்தும் ஈரோட்-டுக்கு வரத்தாகிறது.

தர்மபுரி மஞ்சள் சேலம், ஆத்துார், திருச்செங்கோட்டுக்கு, 20 சத-வீதம்தான் செல்லும். ஈரோட்டுக்குத்தான், 80 சதவீதம் வரத்-தாகும். கர்நாடகாவில் வழக்கமான ஈரோடு மஞ்சள் ரகமும், அந்-தியூர், பவானி பகுதியில் பெர்ஹாம்பூர் 80ம் நம்பர் ரகமும் அறு-வடையாகி வரத்தாகிறது. புதிய மஞ்சள் என்பதாலும், தேவை உள்ளதாலும் ஆர்வமாக வாங்குகின்றனர். புதிய மஞ்சள் வரத்தா-வதால், பழைய மஞ்சளையும் அதிகமாக விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தற்போது, 10,000 முதல், 15,000 மூட்டை வரை வரத்தாகிறது. ஆன்லைனில், ஏப்., மாதம் கொள்முதல் செய்யும் வகையில் குவிண்டால், 13,000 முதல், 15,000 ரூபாய் வரையி-லான விலையில் பதிவு செய்து வைக்கின்றனர். புதிய மஞ்சள் முழு அளவில் வரத்தாகும்போது, விலை நிலவரம் மாறும்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us