/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
48 நிறுவனங்கள் மீது தொ.துறை நடவடிக்கை
/
48 நிறுவனங்கள் மீது தொ.துறை நடவடிக்கை
ADDED : நவ 12, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில் துணை ஆய்வர்கள், உதவி ஆய்வர்கள் கடந்த அக்., மாதம் ஆய்வு மேற்கொண்டனர்.
கடைகள், நிறுவனங்கள், ரேஷன் கடைகள் என விதிமுறை மீறல் தொடர்பாக, 145 கடைகளில் நடந்த ஆய்வில், 40 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.
அதுபோல, சட்டமுறை எடையளவுகள் திருத்தப்படி, பொட்டல பொருட்கள் விற்பனை தொடர்பாக, 102 கடைகள், நிறுவனங்களில் நடந்த ஆய்வில், 4 கடைகளிலும் முரண்பாடு கண்டறியப்பட்டது. குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில், 36 நிறுவனங்களில் நடந்த ஆய்வில் ஊதிய முரண்பாடு கண்டறியப்பட்ட, 4 நிறுவனங்கள் மீது நடவடிக்கைக்கு எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.

