sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போலீசார் கவனத்தை திசை திருப்பி மறியல்

/

போலீசார் கவனத்தை திசை திருப்பி மறியல்

போலீசார் கவனத்தை திசை திருப்பி மறியல்

போலீசார் கவனத்தை திசை திருப்பி மறியல்


ADDED : நவ 12, 2025 01:05 AM

Google News

ADDED : நவ 12, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில், தமிழ் புலிகள் கட்சியினர், 80க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திரண்டனர். லக்காபுரம் கரட்டாங்காடு தொழிலாளி முருகேசன், 47, சாவுக்கு காரணமான கந்தசாமி, கணபதி உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி, மருத்துவமனையில் இருந்து ஜி.ஹெச். ரவுண்டானா வரை ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் பெருந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டு கோஷமிடவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

டவுன் டி.எஸ்.பி., முத்துகுமரன் தலைமையிலான போலீசார், 48 ஆண்கள், 53 பெண்கள் என, 101 பேரை கைது செய்தனர். முன்னதாக கலெக்டர் அலுவலகம் முன் இப்பிரச்னைக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ் புலிகள் கட்சியினர் அறிவித்திருந்தனர்.

இதனால் போலீசார் கலெக்டர் அலுவலகம் சென்று காத்திருந்தனர். ஆனால் போலீசாரின் கவனத்தை திசை திருப்பி ஊர்வலமாக சிறிது துாரம் சென்று மறியலில் ஈடுபட்டு, போலீசாரை பதற்றத்தில் தள்ளிவிட்டனர்.






      Dinamalar
      Follow us