ADDED : ஜன 22, 2026 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், கூட்டுறவு துறை சார்நிலை அலுவலர்க-ளுக்கு, 3 நாள் புத்தாக்க பயிற்சி நேற்று துவங்கியது.
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் குமார், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து
பேசுகையில், ''பொது வினியோக திட்டம், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், கணினி மயமாக்குதல், அரசு திட்-டங்கள், சட்டப்பூர்வ பணிகள், தகவல் அறியும் உரிமை சட்டம், நிதி வங்கியியல், நுகர்வோர் கூட்டுறவு விற்பனை பாதுகாப்பு போன்ற பொருள்கள் குறித்து, பயிற்சி தரப்படுகிறது,'' என்றார்.
மண்டல இணை பதிவாளர் கந்தராஜா, இணை பதிவாளர் செல்-வகுமரன், துணை பதிவாளர்கள் காலிதா பாஷா, முத்துசிதம்பரம், மாதேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

