/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குறைதீர் முகாம் நடந்த ரேஷன் கடையில் ஆய்வு
/
குறைதீர் முகாம் நடந்த ரேஷன் கடையில் ஆய்வு
ADDED : ஜூலை 13, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, பொது வினியோக திட்ட குறைதீர் முகாம், ஈரோடு, வீரப்பன்சத்திரம் அசோகபுரம் ரேஷன் கடையில் நேற்று நடந்தது. இங்கு கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார். மனுக்கள் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்படுவதை பார்வையிட்டு, மனு வழங்கியவர்களிடம் விசாரணை நடத்தினார்.
பின் அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அம்மாபேட்டை டவுன் பஞ்.,ல், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வட்டார சுகாதார மைய கட்டடத்தை பார்வையிட்டார்.