sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியில் வெளியுறவு கொள்கை குறித்து சர்வதேச மாநாடு

/

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியில் வெளியுறவு கொள்கை குறித்து சர்வதேச மாநாடு

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியில் வெளியுறவு கொள்கை குறித்து சர்வதேச மாநாடு

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியில் வெளியுறவு கொள்கை குறித்து சர்வதேச மாநாடு


ADDED : பிப் 03, 2025 07:24 AM

Google News

ADDED : பிப் 03, 2025 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியில், கடந்த, 30, 31ல் வெளியுறவு கொள்கை குறித்த சர்வதேச மாநாடு நடந்தது. டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிபுடிபண்டிட், உலகளாவிய அமைதி, பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதில் இந்தியாவின் பங்கு குறித்து பேசினார்.

இந்தோனேசியாவின், கல்வி, கலாசாரம், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தலைவர் செத்யாபுடி இந்தர்டோனோ, நேபாளத்தின் பொக்காரா பல்கலை யுனிகுளோப் கல்லுாரி கல்வி இயக்குனர் ராதேஷியாம் பிரதான், மலேசியாவின் சன்வே பல்கலை ஆறுமுகம் முத்துசாமி, இந்தியாவின், புதுச்சேரி பல்கலை நந்தாகிஷோர், அழகப்பா பல்கலை செந்தில்குமார், அமெரிக்க பாஸ்டன் பல்கலை இணை பேராசிரியர் பத்ரிநாராயண கோபாலகிருஷ்ணன், பிரான்சின், ரோஷன் ஆப்கானிஸ்தான் ஆன்லைன் பல்கலை சர்வதேச உறவுகள் விவகாரங்களுக்கான துணைவேந்தர் குலாப்மிர் ரஹ்மானி, பங்களாதேசின் ஷாஜலால் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை டிலாரா ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்கள், சர்வதேச ராஜதந்திரம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு முதல் பாதுகாப்பு சவால்கள், கலாசார பரிமாற்றங்கள் வரையிலான தலைப்புகளில் பேசினர். மாநாட்டு மலரை, கல்லுாரி தாளாளர் இளங்கோ வெளியிட்டார். அதன் முதல் பிரதியை, பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிபுடிபண்டிட் பெற்றுக்கொண்டார். கல்லுாரி முதல்வர் பாலுசாமி, அதன் நகலை, ஐ.சி.டபிள்யூ.ஏ., ரிசெர்ச்பெல்லோ ஹிமானிபந்திடம் வழங்கினார்.






      Dinamalar
      Follow us