/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எஸ்.கே.எம்., பூர்ணா சார்பில் கோதுமை மாவு அறிமுகம்
/
எஸ்.கே.எம்., பூர்ணா சார்பில் கோதுமை மாவு அறிமுகம்
ADDED : மார் 09, 2024 01:18 AM
ஈரோடு, ஈரோடு எஸ்.கே.எம்., பூர்ணா நிறுவனம் சார்பில், பூர்ணா கோதுமை மாவு (பூர்ணா சக்கி ஆட்டா) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எஸ்.கே.எம்., அனிமல் பீட்ஸ் அன்ட் ஃபுட்ஸ் நிறுவனம், 42 ஆண்டுகளாக கால்நடை மற்றும் கோழி தீவனங்களை தயாரித்து விற்கிறது. கடந்த, 2006ல் பூர்ணா பெயரில் சமையல் எண்ணெய் வகைகளை தயாரித்து விற்பதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. இந்நிலையில், நிறுவனத்தின் சார்பில் பூர்ணா கோதுமை மாவு (பூர்ணா சக்கி ஆட்டா) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நிர்வாக இயக்குனர் சந்திரசேகர், இயக்குனர் சியாமளா ஷர்மிலி, செயல் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணா அறிமுகம் செய்தனர். இந்த பூர்ணா சக்கி ஆட்டா, பாரம்பரிய திருகல் முறையில் தயாரிக்கப்படுவதால், கோதுமையின் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்கும். சப்பாத்தி, பூரி மற்றும் தோசைக்கு நல்ல ருசி கொடுக்கும். அரை கிலோ, ஒரு கிலோ, 5 கிலோ பேக்குகளில் கிடைக்கிறது.

