ADDED : ஜூன் 02, 2025 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஒருங்
கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம் செயல்-படுத்தப்பட்டு வரும், அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் முன் பருவ கல்விக்கு, இரண்டு முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இன்று சேர்க்கை
நடக்கிறது.
இலவச சீருடை, விளையாட்டு உபகரணங்களை கொண்டு முறைசாரா முன் பருவ கல்வி அளிக்கப்படுகிறது. முட்-டையுடன் மதிய உணவு, ஊட்டச்சத்து மிக்க இணை உணவு வழங்கப்படுகிறது. வீட்டருகேயுள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை பெற்றோர் சேர்க்கலாம். இதற்கு கட்டணம் ஏது-மில்லை.