தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கிராமிய போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

கிராமிய போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

கிராமிய போட்டிகளில் பங்கேற்க அழைப்பு


ADDED : ஜூலை 10, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 05:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:கலை பண்பாட்டு துறை கோவை மண்டலம் சார்பில், ஈரோடு ஜவகர் சிறுவர் மன்றம் மூலம் மாவட்ட அளவில் குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கிராம நடன கலை போட்டிகள் வரும், 18ம் தேதி காலை, 9:00 மணி முதல் ஈரோடு, பவானி சாலை, பி.பெ.அக்ரஹாரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடக்க உள்ளது.

மாவட்ட அளவில், 5 - 8, 9 - 12, 13 - 16 ஆகிய வயது பிரிவில் மாணவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவிக்கவும், கலை விழிப்புணர்வுக்காக குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய கலைகளில் போட்டி நடத்தப்படும். முதல், மூன்று இடங்களை பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும். மேலும், 9-12, 13-19 வயது பிரிவுகளில் முதலிடம் பெற்றவர்கள், மாநில கலை போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

கடந்தாண்டுகளில் போட்டிகளில் முதல் பரிசு வென்றோர், பங்கேற்க அனுமதி இல்லை. போட்டிக்கு வருவோர், ஆதார் அட்டை நகல், வயது சான்றிதழ், பள்ளி படிப்பு சான்றிதளுடன் வரும், 18 காலை, 9:00 மணிக்குள் நேரில் பதிவு செய்ய வேண்டும். மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலரை, 99946 61754 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரம் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us