/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அம்மா உணவகத்தில் இரும்பு கம்பி தடுப்பு
/
அம்மா உணவகத்தில் இரும்பு கம்பி தடுப்பு
ADDED : ஜூலை 10, 2024 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோட்டில் காந்திஜி சாலையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. உணவக வளாகம் முன்புள்ள காலியிடத்தில் இரவில் குடிமகன்கள் மது அருந்தி விட்டு உறங்கினர். பாட்டில்களை உடைத்தும், வீசியும் சென்றனர்.
இதனால் அடுத்தநாள் வேலைக்கு வரும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர். இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கும்படி அம்மா உணவக ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதை தொடர்ந்து, 4.90 லட்சம் ரூபாய் மதிப்பில் இரும்பு கம்பி தடுப்புடன், டைல்ஸ் மற்றும் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.