sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடிவேரி தடுப்பணை நுழைவாயிலில் இரும்பு கதவு; இனி அத்துமீறி நுழைய வாய்ப்பில்லை

/

கொடிவேரி தடுப்பணை நுழைவாயிலில் இரும்பு கதவு; இனி அத்துமீறி நுழைய வாய்ப்பில்லை

கொடிவேரி தடுப்பணை நுழைவாயிலில் இரும்பு கதவு; இனி அத்துமீறி நுழைய வாய்ப்பில்லை

கொடிவேரி தடுப்பணை நுழைவாயிலில் இரும்பு கதவு; இனி அத்துமீறி நுழைய வாய்ப்பில்லை


ADDED : ஜூன் 03, 2024 07:02 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி : கொடிவேரி தடுப்பணையில், அனுமதிக்கப்பட்ட வழியை மீறி, சுற்றுலா பயணிகள் நுழையாதபடி, நுழைவு வாயிலில் இரும்பு கதவு அமைக்கப்பட்டுள்ளது.

கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளிக்க வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கானோர் வருவர். நுழைவு கட்டணமாக ஒருவருக்கு ஐந்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால், கும்பலாக வருவோர், ஓசியில் குளித்து சென்றனர்.

இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வந்தது. இதன் எதிரொலியாக, நுழைவுச்சீட்டை முழுமையாக பரிசோதித்த பின்னரே, இரு வாரமாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.அதேசமயம் நுழைவு வாயிலில் பேரிகார்டு வைத்திருந்தனர். இதன் வழியாகத்தான், பயணிகள் தள்ளிக்கொண்டு அத்துமீறி நுழைந்தனர். இந்நிலையில் நுழைவாயில் பகுதியில், ஆதாரத்துறை சார்பில், 16 அடி நீளத்தில், பத்து அடி உயரத்தில் இரும்பு கதவு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இனி அனுமதிக்கப்பட்ட வழியை மீறி தடுப்பணைக்குள் பயணிகள் நுழைய முடியாது என்று, நீர்வளத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us