ADDED : மே 27, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மேலாண்மை இயக்குனர் வெங்கடேஷ், கோபி அருகே பழைய பாரியூர் கரையில், தடப்பள்ளி வாய்க்கால் மற்றும் கூகலுார் கிளை வாய்க்காலில் நடந்து வரும் துார்வாரும் பணியை நேற்று ஆய்வு செய்தார்.
அவருடன் கூடுதல் கலெக்டர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அர்பித் ஜெயின், கோபி நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் கல்பனா, உதவி பொறியாளர் குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

