/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நீர்வளத்துறை அறிக்கையில் வந்தால் போதுமா? நிஜத்தில் தண்ணீர் கேட்டு விவசாயிகள் மனு
/
நீர்வளத்துறை அறிக்கையில் வந்தால் போதுமா? நிஜத்தில் தண்ணீர் கேட்டு விவசாயிகள் மனு
நீர்வளத்துறை அறிக்கையில் வந்தால் போதுமா? நிஜத்தில் தண்ணீர் கேட்டு விவசாயிகள் மனு
நீர்வளத்துறை அறிக்கையில் வந்தால் போதுமா? நிஜத்தில் தண்ணீர் கேட்டு விவசாயிகள் மனு
ADDED : செப் 27, 2024 07:35 AM
காங்கேயம்: சென்னிமலை பாசன பிரிவுக்கு உள்பட்ட, பசுவபட்டி மற்றும் எக்கட்டாம்பாளையம் கிராம எல்.பி.பி., பாசன விவசாயிகள், காங்கேயம் துணை கோட்டம் கீழ்பவானி வடிநில உதவி செயற்பொறியாளர் சதீஸ்குமாரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பவானிசாகர் அணையில் இருந்து கடந்த மாதம், ௧௫ம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு, 2,300 கன அடி தண்ணீர் விடப்படுகிறது. மேலும், 74/2 அரச்சலுாரில் இருந்து விரிவாக்க கால்வாய்க்கு முழு கொள்ளளவு தண்ணீரும் பெறப்படுவதாக, நீர்வளத்துறை அன்றாடம் வெளியிடும் அறிக்கையில் குறிப்பிடுகின்றனர்.
ஆனால், எங்கள் பகுதி ஆயக்கட்டில், 600 ஏக்கர் நிலங்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல், இன்னும் நாற்றுகூட விடவில்லை. தண்ணீர் விட்டு, 40 நாட்களை கடந்த நிலையில், இனிமேல் நாற்று விட்டு நடவு செய்வது எவ்வளவு நெருக்கடி என்பதை நீர்வளத்துறை உணர வேண்டும். எனவே பாசனப்பகுதியில் உள்ள நிலங்களுக்கு, 60 டியூட்டி என்ற கணக்கிட்டு தண்ணீர் வழங்க கேட்டுக்கொள்கிறோம். ஆயக்கட்டு நிலங்களின் பாசன உரிமையை பாதுகாப்பது நீர்வளத் துறையின் கடமை, பொறுப்பாகும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

