sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உற்சாகத்தில் போட்ட ஆட்டம்; வாக்குவாதத்தால் சிறைவாசம்

/

உற்சாகத்தில் போட்ட ஆட்டம்; வாக்குவாதத்தால் சிறைவாசம்

உற்சாகத்தில் போட்ட ஆட்டம்; வாக்குவாதத்தால் சிறைவாசம்

உற்சாகத்தில் போட்ட ஆட்டம்; வாக்குவாதத்தால் சிறைவாசம்


ADDED : மார் 07, 2025 07:29 AM

Google News

ADDED : மார் 07, 2025 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, : ஈரோட்டை சேர்ந்த தம்பதியர் தமிழரசு, 34; காயத்ரி, 30; இருவரும் பவானி, வர்ணபுரத்தை சேர்ந்த தம்பதி குணசேகரன், 30; சபரி, 26, வீட்டுக்கு, செல்லியாண்டிம்மன் கோவில் விழாவையொட்டி சென்றிருந்தனர். நேற்று முன்தினம் அம்மன் அழைப்பு நிகிழ்ச்சி நடந்தது.

இதில் நான்கு பேரும் கலந்து கொண்டனர். உற்சாக மிகுதியில் தமிழரசு-காயத்ரி சேர்ந்து நடனமாடியுள்ளனர். அப்போது திடீரென மனைவியை தமிழரசு தாக்கியுள்ளார். பாதுகாப்பு பணியிலிருந்த பவானி போலீசார் அதிர்ச்சி அடைந்து தடுத்தனர். தமிழரசோ, 'உங்களிடம் புகார் கொடுத்தோமா; எங்களை ஏன் கேட்கிறீர்கள்?' எனக்கேட்டு வாக்குவாதம் செய்ததுடன், போலீஸ்காரர் ஒருவரின் நெஞ்சில் கையை வைத்து தள்ளியுள்ளார். அங்கு வந்த குணசேகரன்- சபரி தம்பதியும், போலீசிடம் தகராறு செய்துள்ளனர். நான்கு பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். நால்வர் மீதும் வழக்குப்பதிந்த நிலையில், தமிழரசு மற்றும் குணசேகரனை கைது செய்து, ஈரோடு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெண்கள் இருவரையும் ஜாமினில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us