/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீட்டு பூட்டை உடைத்து நகை, வெள்ளி திருட்டு
/
வீட்டு பூட்டை உடைத்து நகை, வெள்ளி திருட்டு
ADDED : செப் 12, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, பெருந்துறை பவானிரோடு ஆசிரியர் காலனியை சேர்ந்த வெங்கடேஷன் மனைவி மஞ்சு, 36; அருகிலுள்ள தோட்டத்துக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த மூன்று ஜோடி தங்கத்தோடு, வெள்ளி பரிசு பொருட்கள் மற்றும் டி.வி., திருட்டு போனது தெரிந்தது. இவற்றின் மதிப்பு, ௧.௨௦ லட்சம் ரூபாய். புகாரின்படி பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.