/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இருளில் தவிக்கும் கடம்பூர் பஸ் ஸ்டாண்ட்
/
இருளில் தவிக்கும் கடம்பூர் பஸ் ஸ்டாண்ட்
ADDED : டிச 16, 2024 03:46 AM
சத்தியமங்கலம்: கடம்பூர் பஸ் ஸ்டாண்ட் இருளில் மூழ்கியுள்ளதால், இரவில் பய-ணிகள் அச்சத்துடன் பஸ்களுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது.
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூரில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்குள்ள ஹைமாஸ் விளக்கு, ஆறு மாதமாக எரியவில்லை. குத்தியாலத்துார் ஊராட்சி கட்டுப்பாட்டில் பஸ் ஸ்டாண்ட் உள்-ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்துக்கு மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது பனிக்காலம் தொடங்கியுள்ளது. இதனால் வன விலங்குகள் இரவில் இரை தேடி ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. கும்மிருட்டாக உள்-ளதால், எது வந்தாலும் தெரியாது. இதில்லாமல் பெண் பயணி-களும், இரவில் பஸ்களுக்கு காத்திருக்க நேரிடும்போது, சமூக விரோதிகளால் தொல்லை ஏற்படும் நிலை உள்ளது. மேலும் மெத்தனம் காட்-டாமல், ஹைமாஸ் விளக்கு பழுதை சரி செய்ய, ஈரோடு மாவட்ட நிர்வாகமாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

