/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிருஷ்ணராயபுரம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி பூஜை
/
கிருஷ்ணராயபுரம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி பூஜை
ADDED : அக் 25, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம், முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.கிருஷ்ணராயபுரத்தில் பாலதண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது.
நேற்று கந்த சஷ்டியை முன்னிட்டு மூன்றாம் நாள் விழாவாக முருகனுக்கு பால், தயிர், இளநீர், பழரசம், மஞ்சள், சந்தனம், பன்னீர், வாசனை திராவிய பொடிகள் கொண்டு அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து வண்ண மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

