/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் வி.ஏ.ஓ., உதவியாளர் விபரீதம்
/
காங்கேயம் வி.ஏ.ஓ., உதவியாளர் விபரீதம்
ADDED : மார் 31, 2025 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்,: காங்கேயம், சத்யா நகரை சேர்ந்தவர் சாமிநாதன், 35; ஊதியூர், முதலிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர். திருமண-மாகி மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து, மூன்றாண்டாக பெற்றோருடன் வசித்தார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானவர், நேற்று முன்தினம் இரவு பூச்சி மருந்து குடித்து விட்டார். காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

