sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அச்சகத்தில் விசிட்டிங் கார்டு திருடிய கர்நாடக வாலிபர்கள்

/

அச்சகத்தில் விசிட்டிங் கார்டு திருடிய கர்நாடக வாலிபர்கள்

அச்சகத்தில் விசிட்டிங் கார்டு திருடிய கர்நாடக வாலிபர்கள்

அச்சகத்தில் விசிட்டிங் கார்டு திருடிய கர்நாடக வாலிபர்கள்


ADDED : டிச 01, 2024 01:21 AM

Google News

ADDED : டிச 01, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சகத்தில் விசிட்டிங் கார்டு

திருடிய கர்நாடக வாலிபர்கள்

பு.புளியம்பட்டி, டிச. 1-

ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டியில், பவானிசாகர் சாலையில் ஒரு அச்சகம் செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் அச்சகத்துக்கு இரு வாலிபர்கள் வந்தனர். விசிட்டிங் கார்டு அச்சடிக்க வேண்டும் என உரிமையாளர் மணியிடம் கேட்டனர். இதனால் மாதிரி விசிட்டிங் கார்டுகளை எடுக்க, அச்சகத்துக்குள் அவர் சென்றார்.

அப்போது முன்பக்க அறையில் டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த, 100க்கும் மேற்பட்ட விசிட்டிங் கார்டுகளை இருவரும் திருடி பாக்கெட்டுக்குள் போட்டு கொண்டனர். இதைப்பார்த்து விட்ட அச்சக உரிமையாளர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இரு வாலிபர்களையும் பிடித்து வைத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற புன்செய்புளியம்பட்டி போலீசார், வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் இருவரும் கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த மகேந்திரா, 27, வீராஸ், 30, என தெரிந்தது. மைசூருவில் தனியார் அக்ரிகல்சர் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை செய்யும் இருவருக்கும்,

தமிழகத்தில் உள்ள, 100 விவசாயிகளை சந்தித்து, அவர்களது மொபைல் எண்களை சேகரித்து நிறுவனத்துக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளனர்.

தமிழ் தெரியாத நிலையில், 100 பேரை சந்திக்க முடியாது எனக்கருதி, அச்சகத்தில் வைத்திருந்த விசிட்டிங் கார்டுகளை திருடியுள்ளனர்.

அதில் இருக்கும் எண்களை நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க முயன்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இருவரையும் எச்சரித்த போலீசார், சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us