/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எலக்ட்ரிக் பைக்கில் புகுந்த கட்டு விரியன்
/
எலக்ட்ரிக் பைக்கில் புகுந்த கட்டு விரியன்
ADDED : நவ 03, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலக்ட்ரிக் பைக்கில் புகுந்த கட்டு விரியன்
தாராபுரம், நவ. 3-தாராபுரம், என்.என்.பேட்டை வீதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். தனது வீட்டின் முன், எலக்ட்ரிக் பைக்கை நிறுத்தியிருந்தார். இந்நிலையில் பைக்கில் பாம்பின் வால், தென்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார். அவர் தகவலின்படி தாராபுரம் தீயணைப்புத் துறையினர் சென்றனர். பாம்பை லாவகமாக பிடித்தனர். கட்டுவிரியன் பாம்பு என தெரிந்தது. வனப்பகுதிக்கு கொண்டு சென்று பாம்பை விட்டனர்.