ADDED : செப் 15, 2026 07:13 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
பழைய பாளையம் இந்திரா வீதியில் பைக்கில் சென்ற இருவர், சாலையோரம்
மொபைல் போனில் பேசியபடி சென்ற பீஹார் மாநில வாலிபர்களை, கத்தியை
காட்டி மிரட்டி மொபைல்போனை பறித்து சென்றனர். இது தொடர்பான வீடியோ
பரவியது. சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
மொபைல்போனை பறித்த ஈரோடு சூரம்பட்டி அண்ணா வீதி ரஜாக் மகன் மாபு, 20, மற்றும்
17 வயது வாலிபர் என இருவரை கைது செய்தனர். அவர்களிடம் ஒரு மொபைல்போன், பட்டா கத்தி, யமஹா பைக்கை பறிமுதல் செய்தனர்.
