sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு பள்ளிகளுக்கு 'கிளம்பிய' இலவச பாட புத்தகம், நோட்டு

/

அரசு பள்ளிகளுக்கு 'கிளம்பிய' இலவச பாட புத்தகம், நோட்டு

அரசு பள்ளிகளுக்கு 'கிளம்பிய' இலவச பாட புத்தகம், நோட்டு

அரசு பள்ளிகளுக்கு 'கிளம்பிய' இலவச பாட புத்தகம், நோட்டு


ADDED : மே 28, 2024 07:17 AM

Google News

ADDED : மே 28, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 6ல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்க, பாட புத்தகங்கள், நோட்டுகள் ஏற்கனவே ஈரோடு மாவட்டத்துக்கு வந்து விட்டன.

இந்நிலையில் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 1 லட்சத்து, 92 ஆயிரத்து, 283 மாணவ, மாணவியருக்கு பாட புத்தகம், நோட்டுகள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கப்படவுள்ளது. இதனால் ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் இருந்து, பள்ளிகளுக்கு நோட்டுகள், பாட புத்தகம் அனுப்பி வைக்கும் பணி நேற்று துவங்கியது. இதேபோல் கருங்கல்பாளையம் காவிரி சாலை மாநகராட்சி நடுநிலை பள்ளியில் இருந்து நடுநிலை பள்ளிகளுக்கு புத்தகம், நோட்டு அனுப்பி வைக்கப்படவுள்ளது. பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம், நோட்டு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us