/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விஜய் கட்சியில் கொங்கு மாஜிக்கள்? அமைச்சர் முத்துசாமி பதில்
/
விஜய் கட்சியில் கொங்கு மாஜிக்கள்? அமைச்சர் முத்துசாமி பதில்
விஜய் கட்சியில் கொங்கு மாஜிக்கள்? அமைச்சர் முத்துசாமி பதில்
விஜய் கட்சியில் கொங்கு மாஜிக்கள்? அமைச்சர் முத்துசாமி பதில்
ADDED : செப் 10, 2024 07:39 AM
ஈரோடு: ஈரோட்டில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, கடனுத-விகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்-டத்தில், 10,491 நபர்கள் அடங்கிய, மகளிர் சுய உதவிக்குழுக்க-ளுக்கு, 80.36 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கீழ்ப-வானி கால்வாயின் கடைமடைக்கு சில இடங்களில் நடந்த தவறால் தண்ணீர் செல்லவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஒரு நாளில் ஆறு கொலை நடந்துள்-ளதால், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக, அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டம்-ஒ-ழுங்கை காக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்-காவது நடக்கும் சம்பவத்தை கொண்டு, சட்ட ஒழுங்குடன் ஒப்பி-டக்கூடாது. இவ்விஷயத்தில் எதிர்கட்சியினர் பாராட்டுவார்கள் என எதிர்பார்க்கவில்லை.
சட்டசபை எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி, அவருடைய கட்சிக்-காகவும் அவர் தற்போது இருக்கும் நிலைமைக்காகவும் தான் இப்-படி சொல்கிறார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துக்கு, கொங்கு பகுதியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டசபை உறுப்பினர் செல்வது குறித்து எனக்கு தெரியாது. விஜய்யின் மாநாட்டுக்கு அரசு கெடுபிடி விதிக்கவில்லை. பாது-காப்புக்காகத்தான் கேள்வி கேட்கப்பட்டதே தவிர, தடுப்பதாக அர்த்தம் இல்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

