/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : மார் 03, 2025 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை அருகே காசிப்பில்லாம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் திருப்பணி நடந்த நிலையில், கும்பாபிஷேக விழா, கடந்த, 27ம் தேதி தொடங்கியது.
விமான கலசம் வைத்தல், அஷ்ட பந்தன மருந்து சாத்தப்பட்ட நிலையில், நேற்று காலை நான்காம் கால ஹோமம், பூர்ணாகுதி முடிந்து கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றி, மாகாளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.