/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
. கருப்பண்ணசுவாமி கோவிலில் 8ம் தேதி கும்பாபிஷேகம்
/
. கருப்பண்ணசுவாமி கோவிலில் 8ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 06, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை,  சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சி கொமரபாளையத்தில், நுாற்றாண்டு பழமையான ஸ்ரீகன்னிமார்,  ஸ்ரீகருப்பண்ணசுவாமி கோவில் மஹா கும்பாபிேஷக திருக்குட நன்னீராட்டு விழா வரும், 8ம் தேதி காலை, 8:௦௦ மணிக்கு நடக்கிறது.
இதை முன்னிட்டு இன்று காலை, தீர்த்தம் எடுத்து வருதல், நாளை தீர்த்தக்குட ஊர்வலம், முதல் கால பூஜை நடக்கிறது. 8ம் தேதி காலை இரண்டாம் கால பூஜைையை தொடர்ந்து, 8:௦௦ மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.முருங்கத்தொழுவு பிரமலிங்கேஸ்வரர் திருக்கோவில் பரம்பரை அர்ச்சகர் அமிர்தலிங்க சிவாச்சாரியார், ஞானபண்டித சிவம் தலைமையில் விழா நடக்கிறது.

